தூத்துக்குடி,நவம்பர்:20–
தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 21 முதல் 24 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்துத் துறை அலுவலர்களும் தயாராக இருக்க மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.21 முதல் 24 வரை தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்காணித்து, மணல் மூடைகள், மரம் அறுக்கும் கருவிகள் போன்ற பொருள்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் அனைத்து துறை அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
