அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மரணம்….

சம்சுதீன்,தலைமைசெய்தியாளர்,தூத்துக்குடி.

அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று (26-03-25) காலை திடீரென்று காலமானார்.

அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுகவில் இருந்து விலகி திமுக-வில் இணைந்து 2000-ல் தென்காசி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றிருந்தார்.பின்னர் கடந்த 2020-ல் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் மாவட்ட கட்சி பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Leave a Reply