கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் வேலை; கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி – ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறையின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் உடனே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்1
ஆய்வக நுட்புனர்2
காசநோய் சுகாதாரப் பார்வையாளர்2
மாவட்ட மருந்தாளுநர்1
மொத்தம்6

வயது வரம்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.03.2025 தேதியின்படி, அதிகபடியாக 45 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், மருத்துவ ஆய்வக தொழில்நுப்டத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவை. கணினி திறனுக்கான சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக 1 ஆண்டு பணி அனுபவம் தேவை.
  • ஆய்வக நுட்புநர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அல்லது அதற்கு நிகரான படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்படி முடித்திருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை.
  • காசநோய் சுகாதாரப் பார்வையாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு முடித்திரு MPW/LHV/ANM/மருத்துவ பணியாளர் பணியில் அனுபவம்/ சுகாதார கல்வியில் சான்றிதழ் படிப்பு/ கவுன்சிலிங் அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். காசநோய் சுகாதாரப் பார்வையாளர் படிப்பு மற்றும் கணினி திறனுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மாவட்ட மருந்தாளுநர் பதவிக்கு பார்மஸி-யில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை.

சம்பள விவரம்

  • முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.19,800 மாத சம்பளம் வழங்கப்படும்.
  • ஆய்வக நுட்புனர் பதவிக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும்.
  • காசநோய் சுகாதாரப் பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும்.
  • மாவட்ட மருந்தாளுநர் பதவிக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://kanniyakumari.nic.in/ என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதார்கள் Bio-Data உடன் புகைப்படம் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார அட்டை, பான்கார்டு, கணினி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். தாபல் உறையின் மேல் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும், விண்ணப்பத்துடன் ரூ.25 மதிப்புள்ள தபால் தலைகளை ஒட்டிய கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்)
மாவட்ட நெஞ்சகநோய் மையம்,
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி வளாகம்,
ஆசாரிபள்ளம் – 629 201, கன்னியாகுமரி மாவட்டம்.

முக்கிய நாட்கள்

விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்05.04.2025 மாலை 05.45 மணி வரை
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் முறையாக கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply