தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டு தெற்கு VMS நகர் பகுதியில் நீண்ட நாள்களாக ஏற்பட்ட மின் சம்பந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன்,மாநகர இளைஞர் அணி செயலாளர் அருண் சுந்தர் வட்ட செயலாளர் காளி துரை வட்ட பிரதிநிதி கோவிந்த ராஜ் மற்றும் சந்தனராஜ்,இன்பசேகர்,மோகன்,வினோத், மின்சார அதிகாரிகள்,பணியாளர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.