கிறிஸ்தவராக மாறியவர்களுக்கு எஸ்சி, எஸ்டி உரிமை செல்லாது –ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தை சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவராக மாறிய நாளிலிருந்தே பட்டியலின அல்லது பழங்குடியினர் எனும் அரசாங்க வரிசைப்படி வழங்கப்படும் சமூக உரிமைகளை இழக்கிறார்கள் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், கொத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஆனந்த். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் சந்தோலு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், “கொத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி மற்றும் 5 பேர், எனது சாதி பெயரை சொல்லி கீழ்த்தரமாக திட்டினர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு குண்டூர் வன்கொடுமை பிரிவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டோர் 2022ல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் தரப்பில், “ஆனந்த் கடந்த 10 ஆண்டுகளாக கிறிஸ்தவ பாதிரியார். எனவே அவர் எஸ்சி உரிமை பெற முடியாது” என வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிநாத், “கிறிஸ்தவராக மாறியவர்களுக்கு எஸ்சி, எஸ்டி சமூக உரிமை வழங்க முடியாது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புகளாலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று. எனவே பாதிரியார் ஆனந்தின் புகார் செல்லாது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply