தூத்துக்குடி விமான நிலையத்தில் பொருட்கள் பாதுகாப்பறை ஏற்படுத்த வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பொருட்கள் பாதுகாப்பறை (Left Luggage Room) மற்றும் பயணிகள் ஓய்வறை (Passengers’ Lounge) போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என விமான பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமான பயணிகள் சங்கத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஆ. சங்கர், பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் புதிய வசதிகளைத் தொடங்கி வைத்ததற்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் சில அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, பொருட்கள் பாதுகாப்பறை, பயணிகள் ஓய்வறை மற்றும் உடான் யாத்ரி கஃபே (UDAN Yathri Cafe) போன்ற வசதிகளை உடனடியாகச் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எந்தவொரு விமான நிலையத்திற்கும் இந்த வசதிகள் அடிப்படைத் தேவைகளாகும். எனவே, பிரதமர் நேரடியாகத் தலையிட்டு இந்த வசதிகளை விரைவாகச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டிற்கு இந்த வசதிகள் மிகவும் அவசியமானவை என்று பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

……………………………………………………………………………

உங்களிடம் செய்தி இருக்கிறதா? எங்களிடம் சொல்லுங்கள்!

உங்கள் பகுதியில் நடந்த சம்பவங்கள், சமூகப் பிரச்சினைகள், அல்லது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான தகவல்கள் என எதுவாக இருந்தாலும், எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அனைத்துத் தரப்பு மக்களின் குரலையும் எங்கள் தூத்துக்குடி மக்கள் ஆன்லைன் இதழ் மூலம் கொண்டு சேர்க்க நாங்கள் காத்திருக்கிறோம்.

செய்திகளைப் பகிர அல்லது தகவல்களைத் தெரிவிக்க, எங்கள் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்:

ஆசிரியர்: பா. செந்தில் குமார் தொடர்புக்கு: 9655550896,0461-7960026

Leave a Reply