Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26ல் தொடக்கம்: ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி வட்டத்தில் 1434ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிப்பு பணிகள் (ஜமாபந்தி) நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மே 14 முதல் 21 வரையிலான தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த ஜமாபந்தி, தற்போது மே 26 முதல் மே 30 வரை மாற்றப்பட்டுள்ளது.
ஜமாபந்தி நடைபெறும் புதிய தினங்கள்:
26.05.2025 – கீழத்தட்டப்பாறை குறுவட்டம்
27.05.2025 – கீழத்தட்டப்பாறை & முடிவைத்தானேந்தல்
28.05.2025 – முடிவைத்தானேந்தல் & புதுக்கோட்டை
29.05.2025 – புதுக்கோட்டை & தூத்துக்குடி
30.05.2025 – தூத்துக்குடி வட்டம்
பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜமாபந்தி நாள்களில் வருவாய் அலுவலரிடம் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version