Site icon thoothukudipeople.com

திருச்செந்தூரில் தங்க ரதத்தில் சுவாமி உலா;அதிகாலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர்,டிசம்பர்-11-

கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விமரிசையான உற்சவம் நடைபெற்றது.

அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் தொடங்கின. சுவாமிக்கு 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கூட்டம் கடலில் புனித நீராடி வந்து, முருகப்பெருமானை பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர். மாலையில், உற்சவ மூர்த்தியான சுவாமி ஜெயந்திநாதர், தனது தேவியர்களான வள்ளி மற்றும் தேவசேனா அம்மனுடன், ஜொலிக்கும் தங்க ரதத்தில் கோவிலின் கிரிப் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த வைபவம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காரான ரா. அருள்முருகன், இணை ஆணையர் க. ராமு உள்ளிட்ட பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Exit mobile version