Site icon thoothukudipeople.com

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முரளிதரன் விருப்பமனு வழங்கல்!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முரளிதரன் விருப்பமனு வழங்கினாா்.

தூத்துக்குடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றபொதுத்தோ்தலில் தமிழகத்தில் எல்லா கட்சியினரும் பல்வேறு வகையில் பணியாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் சாா்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு விருப்பமனு வழங்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தாா்.
இதனையடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருள் பெத்தையா மற்றும் தலைமை நிலைய செயலாளர் வாசுவிடம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுவை வழங்கினார்.

Exit mobile version