தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி, உடற்கல்வித்துறை, காமராஜ் மகளிர் கல்லூரி, கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி, பிளாக் ஃபாரஸ்ட் லீட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, யோவா அகடாமி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 3வது தமிழன்டா சங்கமம் ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில் காலை 6 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெறும் ஓட்டப்பந்தயம் மாரத்தான் போட்டியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா். ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பள்ளி அளவில் மாணவர்களுக்கு, மாணவியர்களுக்கு தனியாகவும் கல்லூரி அளவில் ஆண், பெண்களுக்கு தனியாகவும் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தனியாகவும் மொத்தம் ஐந்து பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 5000 இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மூன்றாம் பரிசு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழன்டா விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழன்டா இயக்க கலைக்குழு தலைவர் ஜெகஜீவன், கௌரவ தலைவர் ஜோதிமணி, அகாடமிதலைவர் ைரபிள் தாா்ச்சியூஸ், உடற்கல்வி ஆசிாியா் குப்புசாமி, திமுக வட்டச்செயலாளர் ரவீந்திரன், உள்பட கல்லூாி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
