Site icon thoothukudipeople.com

கனமழை எச்சரிக்கை:தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!

தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் தற்போது வலுவான மழை மேகங்கள் உருவாகியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, இந்தப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைத்து மீன்பிடிப் படகுகளும் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version