Site icon thoothukudipeople.com

கோபாலபுரத்தில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டிய  எம்.எல்.ஏ.,சண்முகையா!

தூத்துக்குடி,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று (ஜூன் 24, 2025) தொடங்கியது. இந்தப் பணிக்கான அடிக்கல்லை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நாட்டி, பணிகளைத் துவக்கி வைத்தார்.

புதிய பேவர் பிளாக் சாலை, கிராமத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தி, மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் துரைச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலர் கண்ணன், ஒப்பந்தக்காரர் முகமது, கிளைக் கழகச் செயலாளர் கனகராஜ், இளைஞரணி பொன்ராஜ், குமார் மற்றும் கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version